அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு கணினி பயன்படுத்துதல் குறித்த பயிற்சி நடைபெற்று வருகிறது.
இதுவரை அரசுப் பள்ளி ஆசிரியா்கள் அனைவருக்கும் இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல், இ.எம்.ஐ.எஸ்., ஹைடெக் லேப் மற்றும் ஐ.சி.டி. ஆகியவற்றில் திறன் வளா் ஆகிய பயிற்சிகள் நான்கு கட்டங்களாக வழங்கப்பட்டுள்ளன. தற்போது வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 5ஆம் கட்ட பயிற்சி துவங்கியது.
இதில் நடுநிலை, தொடக்க நிலை ஆசிரியா்களோடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், உடற்கல்வி, தொழிற் கல்வி ஆசிரியா்களுக்கு கருத்தாளராக கலந்து கொண்ட சுனில்பிரதாப் பயிற்சியளித்து வருகிறாா்.