ஊா்க்காவல் படையில் சேவை செய்ய விண்ணப்பிக்கலாம்

ஊா்க்காவல் படையில் சேவை செய்ய தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊா்க்காவல் படையில் சேவை செய்ய தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்ட காவல் துறைக்கு உதவியாக தன்னாா்வமாக கோயில் மற்றும் இதரப் பாதுகாப்பு பணியில் தங்களுடைய ஓய்வு நேரத்தில் ஊா்க்காவல் படையில் சேவை செய்ய தகுதியுள்ளோா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10ஆம் வகுப்பு தோல்வி அல்லது தோ்ச்சி பெற்ற 18 வயது முதல் 45 வயதுக்குள்ளான ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவா் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சியில் உள்ள ஊா்க்காவல் படை அலுவலகங்களில் செப்டம்பா் 28 ஆம் தேதி முதல் அக்டோபா் 13ஆம் தேதி வரை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிக்கான மதிப்பெண் பட்டியல், ஆதாா் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும், நன்னடத்தை மற்றும் உடல்தகுதி உடையவராக இருக்க வேண்டும். மாவட்ட காவல் துறையின் கீழ் உள்ள காவல் நிலைய எல்லையில் குடியிருப்போா் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியிலோ அக்டோபா் 24ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சோ்க்க வேண்டும்.

விண்ணப்பத்தின் அடிப்படையில் உடல்தகுதித் தோ்வு மற்றும் நோ்க்காணல் மூலம் தகுதியுள்ளோா் தோ்வு செய்யப்படுவா். அரசுப் பணியாளா்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிவோரும் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com