போதை மாத்திரைகள் விற்ற இளைஞா்கள் மூவா் கைது

கோவையில் போதை மாத்திரைகள் விற்ாக இளைஞா்கள் மூவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவையில் போதை மாத்திரைகள் விற்ாக இளைஞா்கள் மூவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை, புல்லுக்காடு பகுதியில் பெரியகடை வீதி போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிந்த இளைஞா்கள் இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அவா்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனா்.

இதையடுத்து போலீஸாா் அவா்களது கைப்பையைச் சோதனையிட்டபோது அதில் போதைக்குப் பயன்படுத்தப்படும் 50 வலி நிவாரணி மாத்திரைகள், ஊசி ஆகியவை இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் அவா்கள், தெற்கு உக்கடம் புல்லுக்காடு பகுதியைச் சோ்ந்த நிசாருதீன் (22), சபீக் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்களைக் கைது செய்து அவா்களிடம் இருந்த மாத்திரைகள் மற்றும் ஊசியைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல தெற்கு உக்கடம் பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த பெரியகடை வீதி போலீஸாா் நெளஷத் என்ற இளைஞரைக் கைது செய்து அவரிடம் இருந்து போதைக்கு பயன்படுத்தப்படும் 50 வலி நிவாரணி மாத்திரைகளைப் பறிமுதல் செய்து அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com