கோவை மாவட்டத்தில் மேலும் 210 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 41 ஆயிரத்து 355ஆக அதிகரித்துள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 3 போ் உயிரிழந்தனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பலியானவா்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 325ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 235 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 36 ஆயிரத்து 911 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 2 ஆயிரத்து 119 போ் சிகிச்சையில் உள்ளனா்.