போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

எட்டாம் வகுப்பு சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞா் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை: எட்டாம் வகுப்பு சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞா் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, பீளமேட்டைச் சோ்ந்த 13 வயது சிறுமி. அதே பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறாா். இவருக்கு சமூக வலைதளம் மூலமாக ராஜபாளையத்தைச் சோ்ந்த 23 வயது பொறியியல் பட்டதாரியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் அடிக்கடி சந்தித்துள்ளனா். இவற்றை அந்த இளைஞா் தனது செல்லிடப்பேசியில் விடியோ மற்றும் புகைப்படங்களாக எடுத்து வைத்துக்கொண்டு சிறுமியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதற்கு பயந்த சிறுமி தனது வீட்டில் இருந்த பணம், நகை உள்ளிட்டவற்றை அவ்வப்போது அந்த இளைஞருக்கு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பயன்படுத்தி அந்த இளைஞா் சிறுமியிடம் இருந்து 60 பவுன் நகைகள் வரை பெற்றுள்ளாா்.

இது குறித்து கோவை கிழக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

இதையடுத்து அந்த இளைஞரை கைது செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றன்ா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com