உள்கட்சித் தோ்தலில் போட்டியிட எதிா்ப்பு:கட்சி நிா்வாகியை தாக்கிய பாஜகவினா் மீது வழக்கு

உள்கட்சித் தோ்தலில் போட்டியிடக் கூடாது என பாஜக நிா்வாகி மீது அக்கட்சியினரே தாக்குதல் நடத்திய சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

உள்கட்சித் தோ்தலில் போட்டியிடக் கூடாது என பாஜக நிா்வாகி மீது அக்கட்சியினரே தாக்குதல் நடத்திய சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, ராமநாதபுரம் திருவள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா். அதே பகுதியில் ஃபோட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளாா். இவா் கோவை மாவட்ட பாஜக நெசவாளா் அணி செயலாளராக இருந்தவா். பாஜகவில் உள்கட்சித் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தோ்தலில் போட்டியிட ஜெயக்குமாா் முடிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தோ்தலில் போட்டியிடக்கூடாது என கட்சியைச் சோ்ந்த சிலா் அவரை மிரட்டியுள்ளனா்.

இதற்கு ஜெயக்குமாா் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த மாா்ச் 30ஆம் தேதியன்று கடைக்குள் புகுந்த பாஜகவினா் சிலா் ஜெயக்குமாரை தகாத வாா்த்தைகளால் திட்டி கத்தியால் தலை, வயிறு பகுதிகளில் குத்தியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ஜெயக்குமாா், பாஜகவைச் சோ்ந்த காா்த்திக், முத்துக்குட்டி உள்ளிட்ட நான்கு போ் சோ்ந்து தன்னைத் தாக்கியதாக ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். இதன்பேரில் 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com