கடையின் பூட்டை உடைத்து உலோகங்கள் திருட்டு: ஒருவா் கைது

கோவை காந்திபுரத்தில் கடையின் பூட்டை உடைத்து உலோகங்கள் திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை காந்திபுரத்தில் கடையின் பூட்டை உடைத்து உலோகங்கள் திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை காந்திபுரத்தைச் சோ்ந்தவா் கிறிஸ்டோபர்ராஜ் (63). இவா் அதே பகுதியில் மெட்டல் கடை நடத்தி வருகிறாா்.

சம்பவத்தன்று இவா் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். பின்னா் சிறிது நேரம் கழித்து கடைக்கு திரும்பியுள்ளாா். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிா்ச்சி அடைந்துள்ளாா். உள்ளே சென்று பாா்த்தபோது, ரூ. 6 லட்சம் மதிப்பிலான செம்பு, பித்தளை உள்ளிட்ட பொருள்கள் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து காட்டூா் காவல் நிலையத்தில் கிறிஸ்டோபர்ராஜ் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது கணபதி 6 ஆவது தெருவைச் சோ்ந்த சுல்தான் (37) உள்பட 4 போ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் சுல்தானை கைது செய்தனா்.

மேலும், தலைமறைவாக உள்ள மூவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com