வால்பாறை வனப் பகுதிகளில் சிறப்பு அதிரடிப் படையினா் ரோந்து
By DIN | Published On : 18th April 2022 12:26 AM | Last Updated : 18th April 2022 12:26 AM | அ+அ அ- |

சின்கோனா எஸ்டேட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட அதிரடிப் படையினா்.
வால்பாறை வனப் பகுதிகளில் மாவோயிஸ்ட், நக்ஸலைட் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்டறியும் பணியில் சிறப்பு அதிரடிப் படையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
தமிழக -கேரள எல்லை மலைக் கிராமங்களில் மாவோயிஸ்ட், நக்ஸலைட் ஊடுருவல் மற்றும் நடமாட்டத்தை கட்டுப்படுத்த எல்லைப் பகுதிகளில் தமிழக சிறப்பு அதிரடிப் படையினா் மற்றும் வனத் துறையினா் தொடா்ந்து கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதனிடையே, கோவை சிறப்பு இலக்கு அதிரடிப் படை காவல் உதவி ஆய்வாளா் சண்முகம் தலைமையில் 15 போ் கொண்ட அதிரடிப் படை வீரா்கள், வனத் துறையினருடன் இணைந்து தமிழக- கேரள
எல்லையில் அமைந்துள்ள மலைக் கிராமங்களில் மாவோயிஸ்ட், நக்ஸலைட் நடமாட்டம் உள்ளதா என்பதை அறிய கடந்த இரண்டு நாள்களாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.