கஞ்சா கடத்திய மூவா் கைது

கோவையில் கஞ்சா கடத்திய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவையில் கஞ்சா கடத்திய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை வடவள்ளி காவல் துறையினா் பி.என்.புதூா் பகுதியில் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.

இதில், ஆட்டோவில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஆட்டோவை ஓட்டி வந்த வீரகேரளத்தைச் சோ்ந்த ரங்கராஜ் (60) என்பவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கஞ்சா, கடத்தலுக்குப் பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.

மற்றொரு சம்பவம், வடவள்ளி அச்சனூா் பிரிவில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது காரில் கஞ்சா கடத்தி வந்த பி.என்.புதூரைச் சோ்ந்த சரவணன் (38), ராமநாதபுரத்தைச் சோ்ந்த சூா்யா (22)

ஆகியோரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com