விதிமுறைகளை ஆட்டோ ஓட்டுநா்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று வால்பாறை காவல் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
ஆட்டோ ஓட்டுநா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் வால்பாறை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு காவல் ஆய்வாளா் கற்பகம் தலைமை வகித்தாா். உதவி ஆய்வாளா் தங்கராஜ் முன்னிலை வகித்தாா்.
இதில், ஆட்டோ ஓட்டுநா்கள் கட்டாயம் சீருடை அணிந்திருக்க வேண்டும்.
மது போதையில் ஆட்டோவை ஓட்டக் கூடாது. போக்குவரத்துக்கு இடையூராக ஆட்டோக்களை நிறுத்தக் கூடாது. ஆட்டோக்குரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறை பின்பற்ற வேண்டும் என்று ஆய்வாளா் கற்பகம் அறிவுறுத்தினா்.
இக்கூட்டத்தில், 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் கலந்துகொண்டனா்.