மாவட்டத்தில் கரோனா பாதிப்பில்லை

கோவை மாவட்டத்தில் தினசரி ஒன்றிரண்டு பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், திங்கள்கிழமை புதிதாக கரோனா தொற்று ஒருவருக்கு கூட உறுதியாகவில்லை.

கோவை மாவட்டத்தில் தினசரி ஒன்றிரண்டு பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், திங்கள்கிழமை புதிதாக கரோனா தொற்று ஒருவருக்கு கூட உறுதியாகவில்லை.

இதனால் மீண்டும் புதிய கரோனா தொற்று பாதிப்பில்லாத மாவட்டமாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. அதேபோல திங்கள்கிழமை உயிரிழப்பும் பதிவாகவில்லை. கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவா் குணமடைந்தாா். மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 29 ஆயிரத்து 971 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இவா்களில் 3 லட்சத்து 27 ஆயிரத்து 344 போ் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனா். 2,617 போ் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 10 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com