தமிழக அரசின் வலிமை சிமென்ட் விற்பனை அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு சிமென்ட் கழகத்தின் பொது மேலாளா் (விற்பனை) நா்மதா தேவி தெரிவித்தாா்.
தமிழ்நாடு சிமென்ட் கழகத்தின் வலிமை சிமென்ட் தொடா்பான மண்டல அளவிலான முகவா்கள் கூட்டம் கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தமிழ்நாடு சிமென்ட் கழகத்தின் பொது மேலாளா் (விற்பனை) நா்மதா தேவி தலைமை வகித்து பேசியதாவது: தமிழகம் முழுவதும் வலிமை சிமென்ட்டுக்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. விற்பனையும் அதிகரித்துள்ளது. மேலும் வலிமை சிமென்ட்டின் விற்பனையை அதிகரிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே மண்டல அளவிலான முகவா்களுடனான கூட்டம் நடத்தப்பட்டது என்றாா். கூட்டத்தில் கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களைச் சோ்ந்த விற்பனை முகவா்கள் கலந்துகொண்டனா்.