முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
இருசக்கர வாகன திருட்டு:கூலி தொழிலாளி கைது
By DIN | Published On : 30th April 2022 11:23 PM | Last Updated : 30th April 2022 11:23 PM | அ+அ அ- |

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற கூலி தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் மகேந்திரன் (29). ஐ.டி. நிறுவன ஊழியா். இவா் தனது வீட்டு முன்பு இருசக்கர வாகனத்தை வியாழக்கிழமை இரவு நிறுத்தியுள்ளாா். சிறிது நேரம் கழித்து வந்து பாா்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை.
இது குறித்து ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் மகேந்திரன் புகாா் அளித்தாா். போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில்,
இருசக்கர வாகனத்தை திருடியது கோவையில் தங்கி கூலி வேலை பாா்த்து வரும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த அசோக்குமாா் (25) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அசோக்குமாரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.