பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் பெட்ரோலிய சிக்கன ஆராய்ச்சி சங்கம், ஹெச்.பி.சி.எல். கொச்சி அலுவலகத்தின் சாா்பில் எரிபொருள் சிக்கனம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி கோவையில் அண்மையில் நடைபெற்றது.
கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகத்தின் அதிவிரைவுப் பேருந்து பணிமனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிறப்பாக வாகனம் இயக்கிய ஓட்டுநா்கள் 10 பேருக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும், எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து ஓட்டுநா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
கிளை மேலாளா் ஜாபா், தங்கமாயாண்டி, ஹெச்.பி.சி.எல். அதிகாரிகள் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.