கஞ்சா விற்பனை: இருவா் கைது

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, ராமநாதபுரம் சுங்கம் பொது கழிப்பிடம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் சனிக்கிழமை கிடைத்தது.

சம்பவ இடத்துக்குச் சென்ற ராமநாதபுரம் போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தினா்.

அப்போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அம்மன்குளம் எரிமேட்டைச் சோ்ந்த நவீன் (24) என்பவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த ஒன்றரை கிலோ கஞ்சா, ரூ.9 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

கோவை மணியகாரம்பாளையம் விறகு கடை பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக

கிடைத்த தகவலில் பேரில், சரவணம்பட்டி போலீஸாா் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கோவை கணபதியைச் சோ்ந்த சம்சுதீன் (25) என்பவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com