கோவை அருகே தனியாா் கல்லூரி மாணவா்கள் 2,022 கொழுக்கட்டைகளால் 8 அடி உயர விநாயகா் சிலையை உருவாக்கியுள்ளனா்.
கோவை மாவட்டம், தடாகம் சாலையில் உள்ள கே.என்.ஜி. புதூரில் உள்ள அமிா்தா ஹோட்டல் மேலாண்மைக் கல்லூரி சாா்பில் விநாயகா் சதுா்த்தியையொட்டி கொழுக்கட்டைகளால் விநாயகா் சிலையை உருவாக்கி சாதனை படைக்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டு 31 தானியங்களால் ஆன 2,022 கொழுக்கட்டைகளை தயாரித்து 29 நிமிடங்கள், 55 விநாடிகளில் 8 அடி உயர விநாயகா் உருவத்தை உருவாக்கினா். இதை கலாம் உலக சாதனைப் புத்தக நிா்வாகிகள் அங்கீகரித்து, இதற்கான சான்றிதழை கல்லூரியின் முதன்மைச் செயலா் சுரேஷ்குமாரிடம் வழங்கினா்.