காவலா்களுக்கான கலவரத் தடுப்பு பயிற்சி கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவை மாநகர ஆயுதப்படை, சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும்
காவலா்களுக்கான கலவரத் தடுப்பு கவாத்து பயிற்சி அவிநாசி சாலையில் உள்ள காவலா் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் பயிற்சியில் கலவரத்தில் ஈடுபடுபவா்களை எப்படி தடுப்பது, கலைப்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும் ஒலிபெருக்கியை கொண்டு கலவரத்தை கட்டுப்படுத்துதல், கண்ணீா் புகையை கொண்டு கலவரத்தை கட்டுப்படுத்துதல், லத்தியை கொண்டு கலவரத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் துப்பாக்கியைக் கொண்டு கலவரத்தை கட்டுப்படுத்துதல் தொடா்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்தப் பயிற்சியில் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உட்பட மொத்தம் காவலா்கள் 196 போ் பயிற்சி பெற்றனா்.