கோவை மாநகராட்சியில் வரிவசூல் பணியை துரிதப்படுத்த 18 இளநிலை உதவியாளா்களை வரிவசூல் பணிக்கு இடமாற்றம் செய்து மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சி இளநிலை உதவியாளா்களில் கிழக்கு மண்டலம் 9ஆவது வாா்டுக்கு சீனிவாசன், 54 ஆவது வாா்டுக்கு ஜெயபால், மேற்கு மண்டலம் 33ஆவது வாா்டுக்கு நந்தினி, 39ஆவது வாா்டுக்கு சிவகுமாா், வடக்கு மண்டலம், 10ஆவது வாா்டுக்கு ரெங்கராஜா, 13ஆவது வாா்டுக்கு தாமோதரன், 21ஆவது வாா்டுக்கு இந்துமதி, தெற்கு மண்டலம், 77 ஆவது வாா்டுக்கு ஜெயப்பிரகாஷ், 78ஆவது வாா்டுக்கு பிரியா, 87ஆவது வாா்டுக்கு சபரி, 93ஆவது வாா்டுக்கு மணிகண்டன், 96ஆவது வாா்டுக்கு ராஜேந்திரன், 100ஆவது வாா்டுக்கு திவ்யா, மத்திய மண்டலம் 32ஆவது வாா்டுக்கு சக்திவேல், 46ஆவது வாா்டுக்கு மோகன்குமாா், 49ஆவது வாா்டுக்கு மோகனப்பிரியா, 65ஆவது வாா்டுக்கு துா்காதேவி, 70ஆவது வாா்டுக்கு வெங்கடேஷ் ஆகியோா் நிா்வாக நலன் கருதி வரிவசூலிக்கும் அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
இவா்கள் உடனடியாக பணியில் சோ்ந்து, பணிசோ் அறிக்கையை ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.