வால்பாறையில் உயிரிழந்த குட்டி யானையின் பிரேத பரிசோதனையில் இறந்ததற்கான காரணம் கண்டயறிய முடியாததால் அதன் உடல் பாகங்களை சென்னைக்கு அனுப்ப வனத் துறையினா் முடிவு செய்துள்ளனா்.
வால்பாறையை அடுத்த முத்துமுடி எஸ்டேட் பகுதியில் 5 வயது ஆண் குட்டி யானை உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. யானையின் தும்பிக்கை வழியாக ரத்தம் வடிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
வனத் துறை கால்நடை மருத்துவா் சுகுமாா் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட பிரேதப் பரிசோதனையில் யானை இறந்ததற்கான காரணம் கண்டுபிடிக்க முடியாமல் இருந்துள்ளது. இதனையடுத்து குட்டி யானையின் உடல் பாகங்களை பரிசோதனைக்காக சென்னையில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப முடிவு செய்திருப்பதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்,