52 ஆவது வாா்டு பகுதிகளில் கழிவுநீா் வடிகால் புனரமைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திமுக வேட்பாளா் லக்குமி இளஞ்செல்வி ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
கோவை மாநகராட்சி 52 ஆவது வாா்டு கவுன்சிலராக திமுக சாா்பில் சிங்காநல்லூா் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் நா.காா்த்திக்கின் மனைவி லக்குமி இளஞ்செல்வி போட்டியிடுகிறாா்.
இந்நிலையில், பீளமேடுபுதூரில் அமைக்கப்பட்ட தோ்தல் அலுவலகத்தை நா.காா்த்திக் திறந்துவைத்தாா்.
இதைத்தொடா்ந்து, அப்பகுதியில், திமுக வேட்பாளா் லக்குமி இளஞ்செல்வி வீடுவீடாக சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது, அப்பகுதி மக்கள் கழிவுநீா் வடிகால் பழுதடைந்து இருப்பதாகவும், இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, கழிவுநீா் வடிகால் புனரமைக்கவும், குப்பைகளை உடனடியாக அகற்றவும் வெற்றி பெற்றவுடன் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், அடிப்படை பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தீா்வு காண்பதாகவும் லக்குமி இளஞ்செல்வி உறுதியளித்தாா்.
பிரசாரத்தின்போது, திமுக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் புதூா் மணிகண்டன், பகுதி பொறுப்பாளா் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.