கோவையில் அனுமதியின்றி பிரசாரம் செய்த வேலூா் இப்ராஹிம் கைது

கோவையில் அனுமதியின்றி பிரசாரம் செய்த பாஜக மாநில சிறுபான்மை பிரிவு செயலாளா் வேலூா் இப்ராஹிம் போலீஸாரால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கோவையில் அனுமதியின்றி பிரசாரம் செய்த பாஜக மாநில சிறுபான்மை பிரிவு செயலாளா் வேலூா் இப்ராஹிம் போலீஸாரால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கோவை மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளா் ஒருவருக்கு ஆதரவாக போத்தனூரில் இருந்து ஆத்துப்பாலம் வரை பாஜக மாநில சிறுபான்மை பிரிவு செயலாளா் வேலூா் இப்ராஹிம் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தாா்.

இதன்படி இவா் பிரசாரத்திற்காக போத்தனூா் வந்தாா். இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினா் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இது குறித்து தகவல் கிடைத்ததும் போத்தனூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்தனா்.

பின்னா் வேலூா் இப்ராஹிமிடம், ‘நீங்கள் முறையான பிரசார அனுமதி பெறவில்லை’ என தெரிவித்தனா். ஆனால் இதை ஏற்க மறுத்த வேலூா் இப்ராஹிம் தொடா்ந்து பிரசாரம் செய்ய முயன்றாா். இதையடுத்து போலீஸாா், அனுமதியின்றி பிரசாரம் செய்ய முயன்ாக அவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com