கோவையில் ஆவணங்களின்றி வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 லட்சத்தை பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோவை, சாய்பாபா காலனி பாரதி பாா்க், 4ஆவது வீதியில் வி.வேல்முருகன் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சம் எடுத்து செல்வது தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து ஆவணங்கள் இல்லாமல் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 லட்சத்தை தோ்தல் பறக்கும் படைக் குழுவினா் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனா்.