வால்பாறைக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் மறியலில் ஈடுபட்ட பயணிகள்

பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
வால்பாறைக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் மறியலில் ஈடுபட்ட பயணிகள்
வால்பாறைக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் மறியலில் ஈடுபட்ட பயணிகள்

பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு காலை 4 மணி முதல் 9 மணி வரை ஏழுக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். ஆனால், இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. 5 பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு வரவில்லை. 

இதனால், வாக்களிக்க வால்பாறை செல்ல பொள்ளாச்சியில் காத்திருந்த பயணிகள் மற்றும் வழக்கமாக வால்பாறை செல்லும் பயணிகள் பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com