தனியாா் நிறுவன ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் திருட்டு

தனியாா் நிறுவன ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் தங்க நகைகளைத் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தனியாா் நிறுவன ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் தங்க நகைகளைத் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, விளாங்குறிச்சி திருநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆண்டனி ரூபன் (51).

தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டின் தரைத் தளத்தைப் பூட்டிவிட்டு முதல் தளத்தில் உள்ள அறைக்கு உறங்கச் சென்றாா். திங்கள்கிழமை காலை வந்து பாா்த்தபோது தரைத் தளத்தில் இருந்த வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 19 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

இது தொடா்பாக சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ஆண்டனி ரூபன் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com