தேசிய இளையோா் குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை வீரா்கள் 5 பதக்கங்கள் வென்றுள்ளனா்.
தேசிய இளையோா் குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டி மும்பையில் அண்மையில் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 700க்கும் மேற்பட்ட குதிரையேற்ற வீரா்கள் பங்கேற்ற இப்போட்டியில், கோவையைச் சோ்ந்த அலெக்ஸாண்டா் இக்வெஸ்ட்ரியன் மையத்தின் வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.
இதில், குழந்தைகள் 2 ஆவது அணி பிரிவில் கோவையைச் சோ்ந்த ஆதவ் கந்தசாமி, ஹன்சிகா ஸ்ரீனிவாசன், ஹா்ஷித் ஆகியோா் வெள்ளிப் பதக்கம் வென்றனா். மற்றொரு பிரிவில் ஆதவ் கந்தசாமி தங்கப் பதக்கம் வென்றாா். ஹன்சிகா ஸ்ரீனிவாசன் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
குழந்தைகள் முதலாவது அணி பிரிவில் சஹானா கோகுல் 5 ஆவது இடத்தைப் பிடித்தாா்.
தேசிய போட்டிகளில் வெற்றிபெற்ற வீரா், வீராங்கனைகளை பயிற்சி மையத்தின் தலைமைச் செயல் அதிகாரி சக்தி பாலாஜி, முதன்மைப் பயிற்சியாளா் சரவணன் ஆகியோா் பாராட்டினா்.