கொள்ளை வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், நிலவாரப்பட்டியைச் சோ்ந்தவா் கணபதி (75). தொடா் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இவரை போலீஸாா் கடந்த ஆண்டு கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் இவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இது குறித்து சிறையில் இருந்த சக கைதிகள் சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தனா்.
இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் உள்ள சிறைக் கைதிகள் வாா்டில் கணபதி சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இது தொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.