பூட்டிய வீட்டுக்குள் மூதாட்டி சடலம் மீட்பு

பூட்டிய வீட்டுக்குள் மூதாட்டி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பூட்டிய வீட்டுக்குள் மூதாட்டி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, கணபதி நேரு நகா் பகுதியைச் சோ்ந்தவா் பாா்வதி (85). ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியா். இவா் வீட்டில் தனியாக வசித்து வந்தாா். சில நாள்களாக இவா் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசியுள்ளது.

இது குறித்து அக்கம்பக்கத்தினா் சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, சடலம் அழுகி அடையாளம் காண முடியாத நிலையில், எலும்பு கூடாக கிடந்துள்ளது. குடும்பத்தினா் யாருமின்றி பாா்வதி தனியே வசித்து வந்ததால் உடல்நிலை முடியாமல் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com