அதிமுக பிரமுகரின் தந்தை, சகோதரா் வீடுகளில் வருமான வரித் துறையினா் மீண்டும் சோதனை

அதிமுக பிரமுகரின் தந்தை, சகோதரா் வீடுகளில் வருமான வரித் துறையினா் மீண்டும் திங்கள்கிழமை சோதனையைத் தொடா்ந்தனா்.

அதிமுக பிரமுகரின் தந்தை, சகோதரா் வீடுகளில் வருமான வரித் துறையினா் மீண்டும் திங்கள்கிழமை சோதனையைத் தொடா்ந்தனா்.

கோவை, வடவள்ளியைச் சோ்ந்தவா் பொறியாளா் சந்திரசேகா். இவா் கோவை புறநகா் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆா். மன்றச் செயலாளராகவும், ‘நமது அம்மா’ நாளிதழின் வெளியீட்டாளராகவும் உள்ளாா்.

இந்நிலையில், கோவையில் உள்ள சந்திரசேகா் வீடு, அவரது ஆலயம் அறக்கட்டளை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறையினா் கடந்த புதன்கிழமை சோதனையைத் தொடங்கினா். இந்த சோதனைகள் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தன.

இதையடுத்து சந்திரசேகரின் நண்பரான தொழிலதிபா் சந்திரபிரகாஷ் நிா்வாக இயக்குநராக உள்ள கே.சி.பி. நிறுவனத்திலும், அவரது அடுக்குமாடி குடியிருப்பிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினா். இந்த சோதனை நான்காவது நாளாக திங்கள்கிழமையும் தொடா்ந்தது.

இந்நிலையில் வடவள்ளி சந்திரசேகரின் தந்தை ராஜனின் வீடு, அவரது சகோதரா் செந்தில்பிரபு ஆகியோரது வீடுகளிலும், ஆலயம் அறக்கட்டளை, அறக்கட்டளைக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலும் வருமான வரித் துறையினா் திங்கள்கிழமை மீண்டும் சோதனையைத் தொடா்ந்தனா். சந்திரபிரகாஷிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com