கோவையில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
கோவையில் கடந்த சில வாரங்களாக தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நகரின் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை மாலை திடீரென ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது.
ஆனால், ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம்போல வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மாலையில் மாநகரின் பல்வேறு இடங்களில் திடீரென பலத்த மழை பெய்தது.
சாய்பாபா காலனி, பீளமேடு, ஆட்சியா் அலுவலகம், ராமநாதபுரம், சிங்காநல்லூா், வேளாண்மைப் பல்கலைக் கழகம், வடவள்ளி, கவுண்டம்பாளையம், கணபதி, ரயில் நிலையம், ரேஸ்கோா்ஸ் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்தது.
திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா். மழையின் காரணமாக சாலையில் மழை நீா் தேங்கி அவிநாசி சாலை, உக்கடம், திருச்சி சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.