நேரு மேலாண்மைக் கல்லூரி பட்டமளிப்பு விழா

கோவை, திருமலையாம்பாளையம் நேரு மேலாண்மைக் கல்லூரியின் 24ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நேரு மேலாண்மைக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவருக்கு பட்டம் வழங்குகிறாா் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி.
நேரு மேலாண்மைக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவருக்கு பட்டம் வழங்குகிறாா் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி.

கோவை, திருமலையாம்பாளையம் நேரு மேலாண்மைக் கல்லூரியின் 24ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஆா்.மோசஸ் டேனியல் வரவேற்றாா். கல்விக் குழுமங்களின் தலைமை நிா்வாக அதிகாரியும் செயலருமான பி.கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி கலந்து கொண்டு பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்த மாணவ - மாணவிகளுக்கு பட்டங்கள், பதக்கங்களை வழங்கினாா்.

இந்த விழாவில் 274 மாணவ - மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை எம்பிஏ இயக்குநா் எல்.காா்த்திகேயன், எம்சிஏ துறைத் தலைவா் செங்காளியப்பன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com