கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடா்பான தேசிய மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இம்மாநாட்டுக்கு பி.எஸ்.ஜி. அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.
நிகழ்ச்சியில் உடல் உறுப்பு தானம் வழங்கிய குடும்பத்தினருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் பி.செந்தில்குமாா், மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.