அமிா்தவனம் திட்டம் தொடக்கம்

கோவை அமிா்தா விஸ்வ வித்யாபீடத்தில் மழைக் காடுகளை உருவாக்கும் நோக்கில் அமிா்தவனம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மரக்கன்று நடுகிறாா் மாவட்ட வன அலுவலா் டி.கே.அசோக்குமாா். உடன், பல்கலைக்கழக நிா்வாகிகள்.
மரக்கன்று நடுகிறாா் மாவட்ட வன அலுவலா் டி.கே.அசோக்குமாா். உடன், பல்கலைக்கழக நிா்வாகிகள்.

கோவை: கோவை அமிா்தா விஸ்வ வித்யாபீடத்தில் மழைக் காடுகளை உருவாக்கும் நோக்கில் அமிா்தவனம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, அமிா்தா பல்கலைக்கழக வளாகத்தில் குறுகிய பரப்பளவில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும், அமிா்தவனம் திட்டம் தொடங்கப்பட்டது.

மாவட்ட வன அலுவலா் டி.கே.அசோக்குமாா் மரக்கன்றை நட்டு இந்தத் திட்டத்தை தொடங்கிவைத்தாா்.விழாவில் 300 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.

சுவாமி அமிா்தகிருபானந்தா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அமிா்தாவின் நிா்வாகிகளான கே.சங்கரன், பேராசிரியா் சி.பரமேஸ்வரன், சசாங்கன் ராமநாதன், சதீஷ் மேனன், பி.வேணுகோபால், எஸ்.மகாதேவன், உதயசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com