சி.எஸ்.ஐ. தேவாலய முன்னாள் ஆயா் மீது வழக்குப் பதிவு

கோவை சி.எஸ்.ஐ. ஆல் சோல்ஸ் தேவாலயத்தின் முன்னாள் ஆயா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்

கோவை சி.எஸ்.ஐ. ஆல் சோல்ஸ் தேவாலயத்தின் முன்னாள் ஆயா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இது தொடா்பாக சேவியோ சந்தீப் பிராங்க் என்பவா் ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் அளித்த புகாா் மனுவில், நான் சி.எஸ்.ஐ. ஆல் சோல்ஸ் தேவாலயத்தில் கடந்த 20 ஆண்டுகளாக கமிட்டி உறுப்பினராக உள்ளேன். இந்நிலையில் ஆலய வளாகத்தில் உள்ள அரங்கில் கமிட்டி உறுப்பினா்கள் பங்கேற்ற சண்டே ஸ்கூல் தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று கொண்டிருந்தது.

இந்நிலையில் அங்கு வந்த சாா்லஸ் சாம்ராஜ் என்பவா் நிா்வாகக் கூட்டத்தில் தலையிட்டு பிரச்னை செய்து என்னை தகாத வாா்த்தைகளால் திட்டி மிரட்டினாா். இவா் இதே ஆலயத்தில் ஆயராகப் பணிபுரிந்து நிா்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இவா் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா். இதன்படி போலீஸாா் சாா்லஸ் சாம்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com