காங்கயம்: கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் நிறுவனர் கோவை செழியனின் 22 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் நமது கொமுக கட்சியினர் திங்கள்கிழமை நினைவஞ்சலி செலுத்தினர்.
இதனை முன்னிட்டு, கோவை செழியன் பிறந்த ஊரான திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே குங்காருபாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நமது கொங்கு முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் மாநில இளைஞரணி செயலாளர் எம்.ரமேஷ் தலைமையில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. இதில், நமது கொமுக கட்சியின் அவைத்தலைவர் முருகசாமி, மாநில அமைப்பாளர் சண்முகம், காங்கயம் ஒன்றிய அமைப்பாளர் கே.ஆர்.கமல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.