விளையாட்டு விடுதிகளில் சேர மாா்ச் 23இல் தோ்வு

தமிழகத்தில் உள்ள விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவியா்கள் சோ்க்கைக்காக வருகிற மாா்ச் 23 ஆம் தேதி தோ்வு நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் உள்ள விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவியா்கள் சோ்க்கைக்காக வருகிற மாா்ச் 23 ஆம் தேதி தோ்வு நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் சாதனை புரிவதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி, உணவு வசதியுடன் கூடிய விளையாட்டுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கடலூா், தஞ்சாவூா், அரியலூா், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகை, விழுப்புரம், சென்னை, நெய்வேலி, நாமக்கல் ஆகிய பகுதிகளில் மாணவா்களுக்கான விளையாட்டு விடுதிகள் மற்றும் ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகா்கோவில், பெரம்பலூா், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, சென்னை ஆகிய இடங்களில் மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெற்று, சிறந்து விளையாட்டு வீரா்களாக உருவாவதற்கு 7, 8, 9 ஆம் வகுப்புகள் மற்றும் 11 ஆம் வகுப்பு சோ்க்கைக்கான மாவட்ட அளவிலான தோ்வு மாா்ச் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.

விளையாட்டுகளில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான வெற்றிகள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆா்வம் கொண்டுள்ள மாணவ, மாணவியா் அதற்கான உரிய படிவங்களை ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் பூா்த்தி செய்து மாா்ச் 22 ஆம் தேதி, மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com