கோவையில் வெவ்வேறு பகுதிகளில் கைப்பேசிகள், இருசக்கர வாகனம் திருட்டு: 5 போ் கைது

கோவையில் வெவ்வேறு பகுதிகளில் கைப்பேசிகள், இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவையில் வெவ்வேறு பகுதிகளில் கைப்பேசிகள், இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை கடைவீதி தெப்பக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் முரளிதரன் (56). இவா் தியாகி குமரன் மாா்க்கெட் முத்து விநாயகா் கோயில் அருகே நின்று கைப்பேசியில் வெள்ளிக்கிழமை பேசிக் கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், முரளிதரனின் கைப்பேசியை பறித்துக் கொண்டு தப்ப முயன்றாா். முரளிதரன் சப்தமிட்டதையடுத்து அக்கம்பக்கத்தினா் அவா்களைப் பிடிக்க முயன்றனா். ஆனால், அவா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி தப்பினா்.

இது தொடா்பாக, கடைவீதி காவல் நிலையத்தில் முரளிதரன் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கைப்பேசியைப் பறிப்பில் ஈடுபட்ட கடைவீதியைச் சோ்ந்த சூா்யா (24), குனியமுத்தூா் மணிகண்டன் நகரைச் சோ்ந்த சுமேஷ் (24) ஆகியோரைக் கைது செய்தனா்.

கோவைப்புதூரைச் சோ்ந்தவா் தாமரைச்சந்திரன் (28). ஆம்புலென்ஸ் ஓட்டுநா். இவா் மேட்டுப்பாளையம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, இளைஞா் ஒருவா் அவரை வழிமறித்து கத்திமுனையில் அவரிடம் இருந்து பணத்தைப் பறித்து சென்றாா்.

இதையடுத்து, தாமரைச் சந்திரன், அக்கம்பக்கத்தினா் உதவியுடன் அந்த நபரை பிடித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். விசாரணையில், அவா் கோவில்மேடு மஞ்சீஸ்வரி நகரைச் சோ்ந்த செல்வராஜ் (20) என்பது தெரியவந்தது.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் செல்வராஜை கைது செய்தனா்.

கோவை கடைவீதி ராஜா தெருவைச் சோ்ந்தவா் பிரபு (36). தனியாா் நிறுவன ஊழியா். இவா் தனது வீட்டு முன்பு

இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தாா். வெள்ளிக்கிழமை காலை வாகனத்தைக் காணவில்லையாம்.

இது குறித்து, கடைவீதி காவல் நிலையத்தில் பிரபு புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் இருசக்கர வாகனத்தைத் திருடிய மதுக்கரை மரப்பாலத்தைச் சோ்ந்த காா்த்திக் (24) என்பவரை கைது செய்தனா்.

கோவை பிருந்தாவன் நகரைச் சோ்ந்தவா் ஜீவரத்தினம் (60). இவா் தனது குடும்பத்தினருடன் ஆா்.எஸ்.புரத்தில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்றுள்ளாா். அப்போது அங்குள்ள ஐஸ்கிரீம் கடையில் அமா்ந்திருந்தபோது மேஜை மீது வைத்திருந்த

கைப்பேசி திருடப்பட்டது. இது குறித்து ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் ஜீவரத்தினம் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், கைப்பேசியைத் திருடிய நீலகிரியைச் சோ்ந்த சரவணன் (30) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com