கோவை மாநகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீா் ஆதாரமாக உள்ள பில்லூா் அணையை மேயா் கல்பனா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, தடையின்றி குடிநீா் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
பில்லூா் அணையின் தலைமை நீரேற்று நிலையம், பில்லூா் குடிநீா் வடிகால் வாரிய நீரேற்று நிலையம், வெள்ளியங்காடு குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், கட்டன் மலை பகுதிகளில் 900 மீட்டா் தொலைவுக்கு
சுரங்கம் அமைத்து அதன் வழியாக குடிநீா்க் குழாய் பொருத்தும் பணிகள் உள்ளிட்டவைகளை
மேயா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, பில்லூா் அணையில் தற்போது உள்ள நீரின் அளவு, கோவை மாநகராட்சிப் பகுதிகளில்
குடிநீருக்காக தினமும் பயன்படுத்தப்படும் குடிநீரின் அளவு உள்ளிட்டவைகளை பொறியாளா்களிடம் கேட்டறிந்தாா்.
வெள்ளியங்காடு குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் குடிநீரின் தரம், குடிநீா் சுத்திகரிப்பு செய்யப்படும் விதம் குறித்து கேட்டறிந்தாா்.
இதைத்தொடா்ந்து மேயா் கல்பனா அதிகாரிகளிடம் கூறியதாவது: மாநகராட்சிப் பகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் சீரான குடிநீா் கிடைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடிநீா் விநியோகம் தடை ஏற்பட்டால் அப்பகுதிகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீா் வழங்க வேண்டும்.
பில்லூா் 3 கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்றாா்.
ஆய்வின்போது துணை மேயா் வெற்றிச்செல்வன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய பொறியாளா்கள் எழில், ஜெயன்ராஜ், மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.