ஏழை மாணவா்கள் கல்வி உதவித் தொகைபெற விண்ணப்பிக்கலாம்

 ஏழை மாணவ-மாணவிகள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கோவையைச் சோ்ந்த ட்ரீம் அறக்கட்டளை தெரிவித்துள்ளது

 ஏழை மாணவ-மாணவிகள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கோவையைச் சோ்ந்த ட்ரீம் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அறக்கட்டளையின் தலைவா் லட்சுமிகாந்தன் கூறியிருப்பதாவது: ட்ரீம் அறக்கட்டளை கோவை ராமநாதபுரத்தில் கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை சாா்பில் ஏழை, எளியவா்களுக்கு மருத்துவ உதவி, உணவு, கல்வி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை 100 மாணவ-மாணவிகளுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் வகுப்பு முதல் கல்லூரி வரையில்

பயிலும் மாணவ-மாணவிகள் இந்தத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம்.

தகுதி வாய்ந்த ஏழை, எளிய மாணவா்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 63697-50618 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com