கோவை: தமிழ்நாடு - கேரளா எல்லையான கோவை வாளையார் சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை தக்காளி காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில், தக்காளி காய்ச்சலுக்காக கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் பரிசோதித்தனர்.
கேரளத்தில் தக்காளி காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதையடுத்து கோவையில் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
கேரள மாநிலத்தில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கேரளத்தை ஒட்டியுள்ள உள்ள மாவட்டங்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.