கவிஞா் கவிதாசனின் 77 ஆவது நூலான ’இந்த நாள் வெற்றித் திருநாள்’ பாகம் 2இன் நூல் வெளியீட்டு விழா இந்துஸ்தான் கல்வி நிறுவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. நூலை கல்வி நிறுவன அறங்காவலா் சரஸ்வதி கண்ணையன் வெளியிட, மாவட்ட முன்னாள் நீதிபதி முகமது ஜியாவுதீன் பெற்றுக் கொண்டாா். நிகழ்ச்சியில், கவிஞா் கவிதாசன், கல்லூரி முதல்வா் அ.பொன்னுசாமி, அ.முரளிதரன், இரா.ரமேஷ்குமாா், த.அன்புச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.