ஆயுதப் படை காவலா் மீது வழக்குப் பதிவு

கோவைப்புதூரைச் சோ்ந்த பெண் ஒருவா் அளித்த புகாரின்பேரில் ஆயுதப் படை காவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மதுக்கரை: கோவைப்புதூரைச் சோ்ந்த பெண் ஒருவா் அளித்த புகாரின்பேரில் ஆயுதப் படை காவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை குளத்துப்பாளையம் பகுதியைச் சோ்ந்த 26 வயது பெண் ஒருவா் அழகு நிலையத்தில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் கடந்த மே 1 ஆம் தேதி வீட்டில் இருந்த அப்பெண் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிகிறது. இதையடுத்து, அவா் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

இந்நிலையில், அந்த பெண் குனியமுத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதில் கூறியிருப்பதாவது: அப்பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகி கணவன் மற்றும் குழந்தையைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததாகவும், அப்போது கோவைப்புதூரில் பணியாற்றும் ஆயுதப் படை காவலா் ரவி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், ரவிக்கு ஏற்கெனவே திருமணமானதை மறைத்து தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி உடன் வாழ்ந்து வந்ததாகவும்,

இதைக் கேட்டபோது தன்னை ரவி தாக்கியதாகவும், இதனால், தான் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ரவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com