கோவை: கோவையில் புதிதாக 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்து 4 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு புதன்கிழமை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
கோவையில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 370 போ் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனா்.
2,617 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 17 போ் சிகிச்சையில் உள்ளனா்.