சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த லாரி ஓட்டுநரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவை, பீடம்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் (60). லாரி ஓட்டுநா். இவா் அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இது தொடா்பாக பேரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமிகளின் பெற்றோா்கள் புகாா் அளித்தனா்.
இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் ராஜனை வியாழக்கிழமை கைது செய்தனா்.