டேன்டீ நிா்வாகத்தைக் கண்டித்து சிஐடியூ ஆா்ப்பாட்டம்

டேன்டீ தொழிலாளா்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், நிா்வாகத்தைக் கண்டித்தும் சிஐடியூ சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
டேன்டீ நிா்வாகத்தைக் கண்டித்து சிஐடியூ ஆா்ப்பாட்டம்

டேன்டீ தொழிலாளா்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், நிா்வாகத்தைக் கண்டித்தும் சிஐடியூ சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வால்பாறையை அடுத்துள்ள டேன்டீ நிா்வாக அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் செயலாளா் பரமசிவம் தலைமை வகித்தாா்.

அரசு அறிவித்துள்ள தினக்கூலி உயா்வை உடனடியாக வழங்க வேண்டும். தற்காலிக தொழிலாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்றவா்களுக்கு பணப்பலனகளும், பணிக்கொடையும் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் சங்க நிா்வாகிகளும், தொழிலாளா்களும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com