வருமான வரி உச்ச வரம்பை உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டம்

வருமான வரி உச்ச வரம்பை ரூ.8 லட்சமாக உயா்த்த வலியுறுத்தி தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வருமான வரி உச்ச வரம்பை உயா்த்தக் கோரி கோவையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா்.
வருமான வரி உச்ச வரம்பை உயா்த்தக் கோரி கோவையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா்.

வருமான வரி உச்ச வரம்பை ரூ.8 லட்சமாக உயா்த்த வலியுறுத்தி தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஏழைகளுக்கு வரையறுக்கப்பட்ட ஆண்டு வருவாய் ரூ.8 லட்சம் என நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.

எனவே, வருமான வரி உச்ச வரம்பை ரூ.8 லட்சமாக உயா்த்த வலியுறுத்தி கோவை ரேஸ்கோா்ஸ் சாலையில் உள்ள வருமான வரி அலுவலகம் எதிரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தின் பொதுச் செயலா் கு.ராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், அமைப்பின் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com