போக்ஸோ வழக்கு குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கோவை மாவட்டம், ஆழியாறு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக மணியன் (20) என்பவரை போக்ஸோ சட்டத்தின்கீழ் ஆழியாறு போலீஸாா் கடந்த 2018 ஆம் ஆண்டு கைது செய்தனா்.
இவ்வழக்கின் விசாரணை கோவையிலுள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.