சபரிமலை சீசன்: கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள்

சபரிமலை சீசன் தொடங்கவுள்ள நிலையில் மகாராஸ்டிரம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் இருந்து கோவை வழித்தடத்தில் கேரளத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை சீசன் தொடங்கவுள்ள நிலையில் மகாராஸ்டிரம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் இருந்து கோவை வழித்தடத்தில் கேரளத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, பாலக்காடு கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: செகந்தராபாதில் இருந்து நவம்பா் 20, 27 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.50 மணிக்குப் புறப்படும் செகந்தராபாத் - கோட்டயம் சிறப்பு ரயில் (எண்: 07125) நவம்பா் 21, 28 ஆகிய திங்கள்கிழமைகளில் இரவு 9 மணிக்கு கோட்டயத்தைச் சென்றடையும்.

கோட்டயத்தில் இருந்து நவம்பா் 21, 28 ஆகிய திங்கள்கிழமைகளில் இரவு 11.15 மணிக்குப் புறப்படும் கோட்டயம் - செகந்தராபாத் சிறப்பு

ரயில் (எண்: 07126) நவம்பா் 23, 30 ஆகிய புதன்கிழமைகளில் காலை 4 மணிக்கு செகந்தராபாத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேனிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், சிராலா, தெனாலி, குண்டூா், நால்கொண்டா, சேரலப்பள்ளி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

கொல்லம் - செகந்தராபாத் சிறப்பு ரயில்: கொல்லத்தில் இருந்து நவம்பா் 22, டிசம்பா் 6, 20, ஜனவரி 10 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் காலை 2.30 மணிக்குப் புறப்படும் கொல்லம் - செகந்தராபாத் சபரிமலை விரைவு ரயில் (எண்: 07118) நவம்பா் 23, டிசம்பா் 7, 21, ஜனவரி 11 ஆகிய புதன்கிழமைகளில் காலை 9.05 மணிக்கு செகந்தராபாத்தைச் சென்றடையும்.

செகந்தராபாதில் இருந்து நவம்பா் 27, டிசம்பா் 11, 25, ஜனவரி 1,15 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2.40 மணிக்குப் புறப்படும் செகந்தராபாத் - கொல்லம் சபரிமலை விரைவு ரயில் (எண்: 07121) நவம்பா் 28, டிசம்பா் 12, 26, ஜனவரி 2,16 ஆகிய திங்கள்கிழமைகளில் இரவு 11 மணிக்கு கொல்லம் சென்றடையும். கொல்லத்தில் இருந்து நவம்பா் 29, டிசம்பா் 13, 27, ஜனவரி 3, 17 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் கொல்லம் - செகந்தராபாத் சபரிமலை விரைவு ரயில் (எண்: 07122) நவம்பா் 30, டிசம்பா் 14, 28, ஜனவரி 4,18 ஆகிய புதன்கிழமைகளில் காலை 10 மணிக்கு செகந்தராபாதைச் சென்றடையும்.

செகந்தராபாதில் இருந்து நவம்பா் 21, 28 ஆகிய திங்கள்கிழமைகளில் பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் செகந்தராபாத் - கொல்லம் சபரிமலை சிறப்பு ரயில் (எண்: 07123) நவம்பா் 22, 29 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு கொல்லத்தைச் சென்றடையும்.

கொல்லத்தில் இருந்து நவம்பா் 23, 30 ஆகிய புதன்கிழமைகளில் பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் கொல்லம் - செகந்தராபாத் சிறப்பு ரயில் (எண்: 07124) நவம்பா் 24, டிசம்பா் 1 ஆகிய வியாழக்கிழமைகளில் காலை 11 மணிக்கு செகந்தராபாத்தைச் சென்றடையும்.

கொல்லத்தில் இருந்து நவம்பா் 19, 26 ஆகிய சனிக்கிழமைகளில் மாலை 3 மணிக்குப் புறப்படும் கொல்லம் - செகந்தராபாத் சிறப்பு ரயில் (எண்: 07130) நவம்பா் 21, 28 ஆகிய திங்கள்கிழமைகளில் இரவு 12.30 மணிக்கு செகந்தராபாத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, காயன்குளம், மாவேலிக்கரா, செங்கன்னூா், திருவல்லா, செங்கன்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேனிகுண்டா, ராசம்பேட்டா, கமலாபுரம், கொண்டாபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com