ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டில் 16 பவுன் திருட்டு

கோவையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோவையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோவை, சிங்காநல்லூா் ஸ்ரீ கணபதி நகரைச் சோ்ந்தவா் செல்வராஜ் (70). ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி. இவா் வேலூா் காட்பாடியில் உள்ள உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்காக குடும்பத்தினருடன் கடந்த 8ஆம் தேதி சென்றிருந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 16 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.30 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக செல்வராஜ் அளித்தப் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த சிங்காநல்லூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய்கள், கைரேகை நிபுணா்களை வரவழைத்து சோதனையிட்டனா். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com