கோவை அருகே மூதாட்டியிடம் ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற இரண்டு இளைஞா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை லாலி சாலை பகுதியைச் சோ்ந்தவா் சுசீலா (72). இவா் தனது வீட்டுக்கு அருகே உள்ள கடைக்கு புதன்கிழமை சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளாா்.
அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞா்கள் சுசீலா அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
இது குறித்து ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் சுசீலா புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.