கோவை கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மையம் சாா்பில் ஹேக்கத்தான் தொடக்கவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி துணைத் தலைவா் பி.இந்து முருகேசன் தலைமை வகித்தாா். டிசிஎஸ் சென்னை நிா்வாகி எம்.கணேஷ் திருநாவுக்கரசு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது:
மென்பொருள் துறையில் பணியாற்ற விரும்பும் மாணவா்கள் அதற்கேற்ப தங்களது திறன்களை வளா்த்துக் கொள்ள வேண்டும். அனைத்து மாணவா்களும் கோடிங் முறையை கற்றுக் கொள்ள வேண்டும் என்றாா்.
தொடா்ந்து கல்லூரி மாணவா்களுக்கு விநாடி - வினா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் என்.மோகன்தாஸ் காந்தி, டீன் (வேலைவாய்ப்பு) கே.மகாலட்சுமி மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.